states

img

ஜம்மு-காஷ்மீர், ஹரியானாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

10 ஆண்டுகளுக்குப் பிறகு 90  தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடை பெற்றது. அதே போல 90 தொகுதி களைக் கொண்ட ஹரி யானா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடை பெற்றது. ஜம்மு-காஷ்மீரில் அக். 1 அன்றும், ஹரியா னாவில் அக். 5 அன்றும் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், ஹரியானாவில் செவ்வாயன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பேந்தர்ஸ் கட்சி அடங்கிய “இந்தி யா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது என ஒரு சில கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்திகள் வெளி யிட்டுள்ளன.